அன்புடைய காதல்
எல்லோருக்கும் வணக்கம் நான் உங்கள் ஹரி ரொம்ப நாள் அப்பறம் கிட்டத்தட்ட ஒரு உண்மையா நடந்த கதையை சொல்றேன் உங்களுக்கு புடிச்சிருந்தா இந்த tamilstorylover87@gmail.com க்கு GCHAT பண்ணுங்க உங்க மெசேஜ்க்கு எப்பயும் காத்திருப்பேன் வாங்க கதைக்கு போகலாம்
இந்த கதை நாயகி என் மனைவியா ஆன என் அத்தை பொண்ணு அவ பெயர் சரண்யா எல்லாரும் செல்லமா சரன்னு கூப்பிடுவோம் என் அத்தை பொண்ணுக்கு என் மேல சின்ன வயசுல இருந்து ஆசை எனக்கும் அப்படி தான் ஆனா அவளுக்கு அவங்க அப்பா வழி சொந்தத்துல இன்னொரு அத்தை பையன் இருந்தான் அவனுக்கும் சரண்யா மேல தான் ஆசை எப்பயும் சின்ன வயசுல இருந்து எனக்கும் அவனுக்கும் எப்பயும் போட்டி இருந்துட்டே இருக்கும் அவன் பேர் அருண்.
பாக்க ரொம்ப அழகா இருப்பான் ஒல்லியான உடம்பு கூர்மையான பார்வைனு இருப்பான் ஆனா நான் உடம்பு கொஞ்சம் குண்டா எனக்கே என்ன புடிக்காத மாதிரி இருந்தேன் இதனால் எங்க சரண்யாக்கு என்ன புடிக்காம போய்டுமோனு ரொம்ப பயம் இருந்துட்டே இருந்துச்சு எப்படியோ நான் ஏதேதோ முயற்சி செஞ்சு சரண்யா நம்பர் வாங்கிட்டேன் அதுக்கு அப்பறம் தினமும் மெசேஜ் செஞ்சு கொஞ்சம் நகைச்சுவையாவும் பேசி என் அத்தை பொண்ணு சரண்யாவோட மனசுல இன்னும் ஆழமா என் ஆசையையும் என் மனசையும் அவ கிட்ட கொடுத்தேன் இதுக்கு மேல நான் இல்லாம அவ இல்ல அவ இல்லாம நான் இல்லனு மாதிரி அந்த அளவுக்கு ஆகிட்டோம்
ஒரு நாள் எங்க குலதெய்வ கோவில் விசேஷம் எல்லாரும் ஒண்ணா கூடுனோம் அந்த நாள்ல சரண்யாவை பாக்கணுமே ஐயோ அப்படி ஒரு அழகு இது வரைக்கும் பாவாடை தாவணில பாத்த சரண்யாவை இன்னிக்கு அழகா பட்டுபுடவைல பாத்ததும் அந்த ஒரு நொடி கண் சிமிட்டி என்ன கொல்லுறியே சரண் விட்டா இப்பவே உனக்கு இப்பயே தாலி கட்டி கூட்டிட்டு போய்டுவேன்னு மனசுக்குள்ள அப்படி ஒரு குத்தாட்டம் போட்டுச்சு அப்படி ஒரு அழகு தேவதையா ஜொலிச்சா என் சரண்யா
ஆனா நான் எதிர் பாக்காம அந்த இடத்துல என்னோட வில்லன் அருண் அவனும் அங்க வந்தான் அந்த இடத்தில வந்து சரண்யா கூட ரொம்ப கடலை போட்டுட்டே இருந்தான் அத தள்ளி நின்னு பாக்காத மாதிரி நான் நின்னுட்டு இருந்தாலும் எனக்கு உள்ளுக்குள்ள பத்தி எறிஞ்சிட்டு இருந்துச்சு பொறுமையா இருந்தேன் நேரம் ஆக அருண் சரண்யாவ தொட்டு தொட்டு பேசி சீண்டிட்டே இருந்தான் அதனால சரண்யாவும் அவளோட முகம் சுழிஞ்சு கஷ்டமா இருக்கிற மாதிரி தெரிஞ்சிது
இதுக்கு மேல என்னால கோவத்தை அடக்க முடியாம வேகமா நடந்து போய் அவன் சட்டையை புடிச்சு கன்னத்துல நாலு அப்பு விட்டேன் அதுக்குள்ள சுத்தி இருக்கிறவங்க எல்லாரும் கிட்ட வந்து என்ன பிரச்சனைன்னு கேட்க ஆரமிச்சாங்க அப்பறம் நான் நடந்ததை சொன்னேன் எல்லாரும் ரெண்டு பேரும் இந்த பொண்ணுக்கு அத்தை பசங்க தான் இந்த ரெண்டு பேருல யாருக்கு உன் பொண்ண கொடுக்க போறேன்னு அவங்க அம்மா பாத்து கேட்க அவங்க அம்மா யோசிச்சு அவனை சொல்லலாம்னு முடிவு பண்ணி அவன் பேர் எடுக்க வரும் போது சரண்யா டக்குனு என் பேர் சொல்ல அவங்க அம்மாக்கு ஷாக் ஆனாங்களோ தெரியல நான் எப்படி நம்ம சரண்யாக்கு இவ்ளோ தைரியம்ன்னு ஒரு நிமிஷம் ஷாக் ஆகிட்டேன்
உடனே எல்லாரும் அப்பறம் என்னப்பா அந்த பொண்ணே சொல்லிட்டா இதுக்கு மேல என்ன வேணும்னு முடிவு பண்ணி அவங்க அம்மா கிட்ட கேட்டாங்க அவங்க அம்மா கொஞ்சம் தயங்கிட்டே உங்க இஷ்டம்னு சொல்லிட்டாங்க அவங்க ஏன் அப்படி யோசிச்சாங்கன்னா அவனுக்கு என்ன விட பணம் சொத்து எல்லாம் ரொம்ப அதிகம் அது மட்டும் இல்லாம நான் சென்னைல வளந்தவன் அவங்கள பொறுத்த வரைக்கும் சென்னை பசங்கனா சரி இருக்க மாட்டாங்கன்னு அவங்களோட நெனப்பு ஏதோ சரண்யாவோட சம்மதத்தால நாங்க ஆசைப்பட்ட
வாழ்க்கை எங்களுக்கு அமைய போதுனு ரொம்ப சந்தோசமா இருந்தேன் அங்கேயே நைட் எங்க ரெண்டு பேருக்கும் எங்க குலதெய்வகோவிலல வச்சு மோதிரம் மாத்தி நிச்சயம் பண்ணி எங்களுக்கு கல்யாணம் இன்னும் ஒரு வாரத்துலன்னு முடிவு பண்ணாங்க எங்க ரெண்டு பேருக்கும் சந்தோஷம் தாங்கல அந்த நிமிஷத்துல இருந்து எங்க காதல் ஆரமிச்சிது அதே நேரம் கூட்டத்துல ஒருத்தனுக்கு மட்டும் பயங்கர வெறுப்பா இருந்துது
அந்த பகை ஒரு பக்கம் இருந்தாலும் என்னோட சரண்யா கூட இனி என்னோட வாழ்க்கை ஆரமிக்க போதுனு வேற எதை பத்தியும் யோசிக்கல இதோட அடுத்த பாகத்துல எனக்கும் சரண்யாக்கும் நடந்த காதல் அனுபவமும் அதன் நடுவில் அமைந்த காம அனுபவமும் சொல்றேன் கதை புடிச்சிருந்தா சொல்லுங்க புடிக்கலானாலும் சொல்லுங்க தப்ப சரி செஞ்சுக்குறேன் மெசேஜ் பண்ணுவீங்கன்னு நம்புறேன்
நன்றி…
GCHAT : tamilstorylover87@gmail.com
9053300cookie-checkஅன்புடைய காதல்
