கண்டேன் சீதையை – 1

Posted on

நேரம் மாலை 7 மணி தாண்டியிருந்தது. பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஒரு ஓரமாக காரை பார்க் செய்துவிட்டு, சுற்றுலாவுக்காக இந்தியாவிலிருந்து இலங்கை வந்திறங்கியிருக்கும் அந்த ஜோடி வெளியே வரும் வரை காத்துக் கொண்டிருந்தேன்.

வெளிநாடுகளிலிலிருந்து இலங்கை வருபவர்களை அவர்கள் விரும்பிய இடங்களுக்கு அழைத்துச் செல்வதும் அந்த இடங்கள் பற்றிய விளக்கங்களைக் கொடுப்பதும் தான் எனது பிரதானமான வேலை.

கிட்டத்தட்ட ஒரு அரை மணி நேரக் காத்திருப்புக்குப் பின்னர் பயணிகள் விமான நிலையத்திலிருந்து வெளியே வருவதனைக் கண்டேன். அதில் நான் தேடி வந்த ஜோடியினை ஊர்ஜிதம் செய்துகொண்டதும், நான் அவர்கள் பக்கத்தில் சென்று என்னை அறிமுகம் செய்து கொண்டேன்.

“ஹலோ சர்..!
வெல்கம் டு ஸ்ரீலங்கா. ஐ ஆம் யுவ ட்ரவெல்லிங் கைட் விக்கி. நைஸ் டு மீட் யு”

“ஹாய் விக்கி. ஐ ஆம் சாய். அன்ட் ஷீ இஸ் மை வைஃப் ரெமிதா. நைஸ் டு மீட் யூ டூ.”

“ஹலோ மேடம். வெல்கம் டு ஸ்ரீலங்கா.”

“ஹலோ.”

சாய் உயரமாகவும் அழகாகவும் இருந்தார். ஆனால், கொஞ்சம் அமைதியான சுபாவம். ரெமிதா அழகே உருவாக தேவதை போல காட்சியளித்தாள். நான் ஹலோ சொன்னதும் என்னைப் பார்த்து
லேசாக ஒரு அறிமுகச் சிரிப்பு சிரித்தாள். அந்த லேசானா சிரிப்பினில் கூட என்னை சிதற வைக்கும் அளவுக்கு அவ்வளவு அழகாக இருந்தாள். சிரிக்கும் போது உப்பிக்கொண்ட அவளது கன்னங்கள் இரண்டினையும் அப்படியே கடித்துச் சாப்பிட வேண்டும் போல இருந்தது. ஓரிரு நொடி நேரத்தில் அவளைப் பார்த்த பார்வையை விலக்கிக் கொண்டு சாயுடன் பேச ஆரம்பித்தேன்.

பின்னர் நான் காருக்குச் செல்லலாம் என்றதும் அவள் என்னைக் கடந்து செல்லும் பொழுது அவளது கூந்தல் வாசனையும் அவள் அணிந்திருந்த பெர்பியூம் கலந்த சேலையின் வாசனையும் சேர்ந்து ஒரு வித்தியாசமான வாசனையாகி என்னை மதி மயக்கியது. முன்னே சென்று கொண்டிருக்கும் அவளை நான் கண்களாலேயே அளந்தேன். அளவான உயரம். உடம்புக்கும் உயரத்திற்கும் ஏற்றவாறு அளவான மார்பகங்களும் பின்னழகுகளும் அவளது அழகினை மேலும் மேலும் மெருகூட்டிக் கொண்டிருந்தன.

பிரம்மன் அவளைப் படைக்கும் போது மட்டும் என்ன மூடில் இருந்தானோ.. அவளை ரசித்து ருசித்து செதுக்கியிருந்தான். பார்த்து இரண்டு நிமிடங்கள் கூட ஆகியிருக்கவில்லை. ஆனால் நான் முழுவதுமாக அவளின் அழகில் சொக்கிப் போயிருந்தேன்.

இவ்வளவு அழகான ஒரு மனைவி கிடைக்கப் பெற்ற அந்த சாய் உண்மையிலேயே குடுத்து வைத்தவர் தான். வாழ்க்கையில் என்ன தான் புண்ணியம் செய்திருப்பாரோ என எண்ணிக் கொண்டு அவர்களை அழைத்துக் கொண்டு வந்து வண்டியை ஸ்டார்ட் செய்தேன்.

ரியர் வியூ கண்ணாடி வழியாக என்னை அறியாமலேயே அவளை நான் பல தடவைகள் பார்த்துக்கொண்டேன். அவளைப் பார்ப்பதற்காகவே ஹோட்டல் செல்லும் வழி முழுவதும் அவர்களிடம் பல தடவைகள் பேச்சுக் கொடுத்தேன். அப்படியே அவர்களைப் பற்றி கொஞ்சம் கொஞ்சமாகக் கேட்டுத் தெரிந்தும் கொண்டேன்.

ஹோட்டலை அடைந்ததும், அவர்களை ஹோட்டலில் இறக்கிவிட்டு எல்லா ஏற்பாடுகளையும் செய்து கொடுத்துவிட்டு நான் வீடு வந்து சேர்ந்தேன். ஆனாலும் அவளது நினைப்பு மட்டும் என்னை விட்டு அகன்றிருக்கவில்லை. அவள் இன்னொருவரின் மனைவி என்றாலும் கூட என்னால் அவளைப் பற்றி நினைக்காமல் இருக்க முடியவில்லை. இப்படி ஒரு தேவதை எனக்கும் மனைவியாக வந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனையும் செய்து பார்த்துக் கொண்டேன். என்னால் சரியாக தூங்கக் கூட முடியவில்லை. ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பார்த்த ஒரு பெண்ணின் மேல் இவ்வளவு ஆசை வருமா என்று என்னை நானே பல தடவைகள் கேட்டுக் கொண்டேன். அந்த அளவுக்கு அவளது அழகு என்னை சிறை பிடித்திருந்தது.

பொதுவாக அழகான பெண்களைப் பார்த்தால் அவர்களது அழகோ உடம்பமைப்போ எனக்கு ஆசைகளைத் தூண்டும் பொழுது அவர்களை நினைத்து சுய இன்பம் காண்பதோடு அவர்களுக்கும் எனக்குமான கற்பனை உறவுமுறைகள் முடிந்துவிடும். ஆனால், இவளை என்னால் அப்படி எண்ண முடியவில்லை. அழகு, கவர்ச்சி என்பதனையும் தாண்டி அவள் ஒரு வகையான ஈர்ப்பினையும் கொண்டிருந்தாள். அது என்னவென்று புரியாமல் தவித்துக் கொண்டிருந்த எனது மனதிடம் நான் பலமுறை சொல்லிப் பார்த்து விட்டேன், அவள் உனக்கானவள் இல்லை, இன்னொருவரின் மனைவி என்று. ஆனாலும் பாழாய்ப்போன மனம் கேட்டால் தானே..!

எது எப்படி இருந்தாலும், நாளைக் காலை 4 மணியிலிருந்து இன்னும் பதினைந்து நாட்களுக்கு அவள் என்னுடன் தான் இருக்கப் போகிறாள். ஆசை தீர அவளைப் பார்த்து ரசித்துக் கொள்ளலாம். அவளுடன் நட்பினை வளர்த்துக் கொள்ளலாம். முடிந்தால் அவளை ஆசைதீர அனுபவித்தும் கொள்ளலாம் என்று கூறி எனது மனதினை சமாதானப்படுத்திக்கொண்டு மெல்ல தூங்கிப் போனேன்.

அவர்கள் ஏற்கனவே கூறியது போல அன்றைய நாள் அதிகாலை 5 மணிக்கு எழுந்து குளித்துவிட்டு ரெடியாகிக் கொண்டு வண்டியை எடுத்துக்கொண்டு அவர்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்குச் சென்றேன்.

அவர்களும் ரெடியானதும் சுமார் 6 மணியளவில் எங்களது பயணத்தினை ஆரம்பித்தோம். ரெமி சிகப்பு நிற சுடிதாரும் வயலட் நிற பேண்ட்டும் அணிந்திருந்தாள். அவளது முகம் அப்பொழுது தான் பூத்த பூ போல புதுப்பொலிவுடன் பளிச்சிட்டுக் கொண்டிருந்தது.

(தொடரும்..)

உங்கள் கருத்துக்களையும் விமர்சனங்களையும் இந்த மெயிலுக்கு தெரிவிக்கலாம்.
remihot123@gmail.com

The post கண்டேன் சீதையை – 1 appeared first on Tamil Sex Stories.

Gravatar Image
Athena is a passionate writer who loves to explore the world of erotic storytelling. Since 2017, he has been collecting stories from around the internet and publishing them in one place for everyone to enjoy.