யட்சி 8 – kamakathaikal

Posted on

நான் காரை பார்க் செய்திருந்த அந்த ஹோட்டலின் கார் பார்க்கிங்கை நோக்கி எனது ஆருயிர்க் காதலி யாமினி யாரோ ஒருத்தனுடன் சிரித்துப் பேசிக்கொண்டு வந்து கொண்டிருந்தாள்.

வருணும் கீர்த்தனாவும் அவர்களுக்குப் பின்னால் சற்று இடைவெளி விட்டு வந்து கொண்டிருந்தனர். நல்ல உயரமான வாட்டசாட்டமான ஒரு ரிச் லுக் ஆண்மகன் அவன். வெள்ளையாகவும் அழகாகவும் இருந்தான். பேசிக்கொண்டே வந்தவர்கள் ஒரு பிராண்ட் நியூ பென்ஸ் காருக்கு முன்னால் நின்று கொண்டனர். கார் ஷட்டர்கள் எல்லாமே மூடிய நிலையில் இருந்ததனால், அவர்கள் என்ன பேசுகிறார்கள் என என்னால் சரியாக கேட்க முடியவில்லை.

கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்து விட்டு அவன் யாமினியிடம் “பை” சொல்லிவிட்டு அந்த பென்ஸில் ஏறிப் புறப்பட்டான்.

எனக்கு தலையெல்லாம் சுற்ற ஆரம்பித்தது. மூளையும் இதயமும் சற்று நேரம் ஸ்தம்பித்துப் போனது போல இருந்தது. அந்தக் குளிரிலும் எனக்கு வியர்க்க ஆரம்பித்தது.

இதுவரை காலமும், யாமினி எந்த ஒரு அந்நிய ஆண்களுடனும் பேசி நான் பார்த்ததில்லை. போனில் கூட அவள் யாரும் ஆண்களுடன் பேசி நான் பார்த்ததில்லை. ஆனால், திடீரென அதுவும் கொடைக்கானலில் ஒரு ஆணுடன் சிரித்துப் பேசிக்கொண்டு வருகின்றாள் என்றால் எனக்கு அது ரொம்பவே விசித்திரமாக இருந்தது.

யார் அவன்?
ஒரு வேளை அவளது காதலனாக இருப்பானா? அவளுடன் கூடப்படித்த யாரவது ஒரு நண்பனாக இருப்பானா? இல்லையென்றால் யாராவது ஒரு சொந்தக்காரப் பையனாக இருப்பானா? ஒரு வேளை, அவளுக்கு பார்த்திருக்கும் அந்த டாக்டர் மாப்பிள்ளை அவன் தானா?

விடை தெரியாத கேள்விகள் பலவற்றுடன் நான் காரில் அமர்ந்திருந்தேன். அவர்கள் மூவரும் அங்கிருந்து ரூமுக்குச் சென்றதும் சற்று நேரத்தில் நானும் ரூமுக்குச் சென்றேன்.

அவர்கள் மூவரும் எங்களது ரூமிலேயே உக்கார்ந்து பேசிக் கொண்டிருந்தனர். என்னைக் கண்டதும் பேச்சை நிறுத்திவிட்டு ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தவாறு அமர்ந்திருந்தனர். யாமினியின் முகம் வெட்கத்தில் சற்று சிவந்திருந்தது.

“எங்க போனீங்க மூணு பேரும்? கால் பண்ணாலும் எடுக்கல?” என்றேன்.

“அது வந்து…..” என்று இழுத்தான் வருண்.

“என்ன வந்து?”

“அக்காக்கு பாத்திருந்த மாப்ள வீட்ல இருந்து கல்யாணத்துக்கு ஓகே சொல்லிட்டாங்க.”
பெரும் புயல் ஒன்று எனது இதயத்தோடு மோதி நாடி, நாளங்களில் இருந்து இதயத்தினை தனியாக பிய்த்து இழுத்து எடுத்தது போல இருந்தது.

“ஓஹ். கங்ராட்ஸ் யாமினி. இது எப்போ? சொல்லவே இல்ல?” என்று பொய்யாகக் கேட்டு சிரித்தவாரு அவர்களுடன் அமர்ந்தேன்.

“நேத்து நைட் தான் அவங்க வீட்ல இருந்து கால் பண்ணி சொன்னாங்க.” என்றான் வருண்.

“ஓஹ்!”

“இன்னொரு விஷயம்” வருண் தொடர்ந்தான்.

“என்ன?”

“மாப்ள எங்க அப்பாகிட்ட பேசும் போது நாமெல்லாம் காலைல கொடைக்கானல் டூர் போறோம்ன்னு பேச்சு வாக்குல சொல்லியிருக்காரு போல, அவரும் இதுதான் சாக்குன்னு அக்காவ பாக்குற ஆசைல உடனே கிளம்பி இங்க வந்துட்டாரு.”

“ஓஹோ. இது வேறயா? அவரு எங்க இப்போ?”

“அவரு பக்கத்து ஹோட்டல் ஒண்ணுல தான் தங்கி இருக்காராம். இப்போ தான் இங்க வந்து அக்காவ பாத்துட்டு போறாரு. நாளைக்கு வரேன்னு சொல்லி இருக்காரு.” என்றான் வருண்.

“அவர இங்க வர சொன்னா நாம இங்கயே அவர தங்க வைக்கலாம் ல?” என்றேன்.

“அதெல்லாம் வேணாம் ணா. உங்க அம்மாக்கு தெரிஞ்சா ஏதாச்சும் நினைப்பாங்க. அவரும் அப்பா அம்மாகிட்ட பொய் சொல்லிட்டு தான் வந்திருக்காராம். அவரு இங்க வந்தது யாருக்குமே தெரியாது. ஈவ்ன் அக்காக்கு கூட தெரியாது.” என்றான் வருண்.

“ஐயோ! எங்க அம்மா அதெல்லாம் எதுவும் நினைக்க மாட்டாங்க. நோ வொர்ரிஸ்” என்றேன்.

“பரவால்லண்ணா. நாளைக்கு வரேன்னு சொல்லி இருக்காரு. முடிஞ்ச வரைக்கும் அம்மாக்கு தெரியாம சமாளிப்போம்.” என்றாள் கீர்த்தனா.

“சரி. என்னமோ பண்ணுங்க. முதல்ல எல்லாரும் போய் சாப்பிடுங்க.” என்றேன்.

“நீ சாப்பிடலையா?” என்று கேட்டாள் கீர்த்தனா.

“நா கொஞ்சம் வெளிய போயிட்டு வந்து சாப்பிடுறேன்.” என்று கூறி விட்டு எழுந்து ரூமை விட்டு வெளியே வந்தேன்.

மனது வலித்தது. காதுகள் இரண்டும் அடைத்துக் கொண்டது. கண்கள் இரண்டும் சாரை சாரையாக கண்ணீரைச் சொரிய வேகமாக காரை நோக்கி நடந்தேன்.

அவளுக்கு மாப்பிள்ளை பார்த்திருக்கிறார்கள் என்று சொன்ன போது இருந்ததை விட, இருவருக்கும் பிடித்துப் போய் சம்மதமும் கூறி, இப்பொழுது அவனே நேரில் வந்து அவளை சந்தித்து விட்டுப் போய் இருந்தது எனக்கு ரொம்பவே வலித்தது.

அவள் எனது காதலை வேண்டாம் என்று கூறிய போது கூட எனது கண்கள் இந்த அளவுக்கு கண்ணீரினைச் சொரியவில்லை.

காரில் அமர்ந்தபடி வலி தீர அழுது தீர்த்தேன். அழுதழுது கொண்டே பீரினையும் கொஞ்சம் கொஞ்சமாக குடித்து முடித்து விட்டு சிகரட் ஒன்றினை எடுத்துக் கொண்டு காரை விட்டு இறங்கினேன். பக்கத்தில் இருந்த மதில் சுவற்றில் சாய்ந்து கொண்டு சிகரட்டினைப் பற்ற வைத்தேன்.

போன் அலறியது. எடுத்துப் பார்த்தால் கீர்த்தனா.

“ஹ்ம்ம். சொல்லு.”

“எங்க இருக்க?”

“கார் பார்க்கிங் ல.”

“அங்க என்ன பண்ற?”

“சும்மா தான். கார் ல உக்காந்து பாட்டு கேட்டுன்னு இருக்கேன்.”

“இரு வரேன்.” என்றவாறு போனை கட் செய்து விட்டு அடுத்த கணமே பக்கத்தில் வந்து நின்று,

“இதுக்குத் தான் தனியா இங்க வந்தியா?” என்றாள்

“இல்ல. அது வந்து….. ரொம்ப கூலா இருந்திச்சா. அதனால தான்.”

“குடிச்சிருக்கியா?”

“இல்லயே.”

“பொய் சொல்லாத. இந்த நாத்தம் நாறுது.”

“ஒரே ஒரு பீர் தான் டி. குளிருக்காகத் தான்.”

“எங்களுக்கும் தான் குளிருது. நாங்க என்ன பீரா குடிச்சிட்டு இருக்கோம்?”

“ஒண்ணே ஒண்ணு தான் டி. விடு.”

“சரி. அத விடு. பாத்தியா அந்த பையன் செஞ்ச வேலைய?”

“எந்த பையன்?”

“விக்ரம். யாமினி பியான்ஸி.”

“ஓஹ். அவன் பேரு விக்ரமா? என்ன பண்ணான் அவன்?”

“யாமினிய அவங்க வீட்ல ஓகே பண்ணதும் அவள பாக்க அவன் இங்கயே வந்துட்டான். அதுவும் பென்ஸ் கார்ல.”

“அதுக்கு என்ன என்ன பண்ண சொல்ற? என்கிட்ட பென்ஸ் கார் இருக்கா என்ன?”

“கார விடு. அதில்ல மேட்டரு. பொண்ணுங்களுக்கு இந்த மாதிரி பண்ற பசங்களத் தான் ரொம்ப பிடிக்கும். இப்டியெல்லாம் பண்ணா தான் இம்ப்ரெஸ் ஆவாங்க. நீயும் இருக்கியே. பக்கத்துலயே மெழுகு பொம்ம மாதிரி ஒரு பொண்ண வச்சிக்கிட்டு அவள கொஞ்சம் கூட இம்ப்ரெஸ் பண்ணாம இருந்திருக்க இவ்ளோ நாள். வேஸ்ட்டுணா நீ.”

எனக்கு மறுபடியும் “ஓ” வென அழ வேண்டும் போல இருந்தது. ஆனாலும், எனது கஷ்டங்களைக் கூறி அவளையும் கஷ்டப்படுத்த வேண்டாமே என நினைத்து என்னை நானே கட்டுப்படுத்திக் கொண்டேன்.

“என்னடி சொல்ற நீ? நா எதுக்குடி அவள இம்ப்ரெஸ் பண்ணனும்?”

“அவள மாதிரி ஒரு பொண்ணு உனக்கு கிடைப்பாளாண்ணா? பாரு. அவ இன்னொருத்தன கல்யாணம் பண்ணப்போறா ன்னு நினைக்கும் போது எனக்கே அவ்ளோ கடுப்பாகுது. நீயும் இருக்கியே. சீ.”

“இங்க பாரு கீர்த்து. அவங்க அப்பா பாத்திருக்குற மாப்ளைய பாரு. அவன் ஒரு டாக்டர். ரிச் பேமிலி. சொந்தமா பென்ஸ் கார் வச்சிருக்கான். அந்த மாதிரி அவங்க ஸ்டேட்டஸ்க்கு ஏத்தமாதிரித் தான் அவங்க மாப்ள பாப்பாங்க. நா அவள இம்ப்ரெஸ் பண்ணி லவ் பண்ண வச்சாலும் அவங்க அப்பா அம்மா அத ஏத்துப்பாங்களான்னு தெரியாது. சும்மா இதையெல்லாம் நெனச்சி நீ மனச போட்டுக் குழப்பிக்காத. போய் தூங்கு. அம்மா தேடப்போறாங்க.”

‘அம்மா தூங்கிட்டாங்க. யாமினி துணைக்கு என்னையும் கூட்டிகிட்டு கீழ வந்து, அதோ.. அங்க நின்னு விக்ரம் கூட போன் பேசிட்டு இருக்கா. அதனால தான் நா உனக்கு போன் பண்ணேன்.”

“ஹ்ம்ம். சரி. நீ போய் யாமினி கூட துணைக்கு நின்னுக்கோ. நா கொஞ்ச நேரம் இங்கயே இருந்துட்டு வரேன்.”

“ஹ்ம்ம். சரிண்ணா. உன் ரூம்ல சாப்பாடு எடுத்து வச்சிருக்கேன். சீக்கிரமா போய் சாப்ட்டு தூங்கு.”
என்றவாறு அவள் கிளம்ப, நான் சற்று தூரத்தில் ஒரு மரத்தடி பென்ச்சில் அமர்ந்து, சிரித்து சிரித்து பேசிக் கொண்டிருக்கும் வெள்ளை நிற ஆடையணிந்திருந்த அந்த யட்சியினை நோக்கினேன்.

அவளுக்கென்ன? அவளுக்கு எங்கே புரியப் போகிறது எனது வலி? என் கண்களுக்கு முன்னாலேயே அவளது வருங்காலக் கணவனுடன் சிரித்து சிரித்துப் பேசிக்கொண்டிருக்கிறாள்.

ஆனாலும் அவள் மேல் எந்தத் தப்பும் இல்லை. அவள் அவளுக்கென அவளது அப்பா அம்மா பார்த்து வைத்திருக்கும் மாப்பிள்ளையுடன் தானே பேசுகிறாள்.

என்னைப் பற்றி நினைக்க எனக்கே கோபமாகவும் எரிச்சலாகவும் வந்தது.

கீர்த்தனா கூறியது முற்றிலும் சரி தான். நான் ஒரு கையாலாகாதவன். ஆண்டவன் அவளை என்னிடம் அனுப்பி இத்தோடு 5 ஆண்டுகளும் இரண்டு மாதங்களும் கடந்துவிட்டன. ஆனால், அவளிடம் எனது காதலைக் கூறியதனைத் தவிர, நான் அவளை கவரும் விதமாக எதுவுமே செய்ததில்லை. அவள் என்னைத் தொல்லை எனக் கூறிய ஒரு வார்த்தைக்காக கோபத்திலும் ஈகோவிலும் 5 வருடங்களாக நான் அவளிடம் பேசாமல் இருந்திருக்கிறேன். பின்னர் அவள் எப்படி என்னைக் காதலிப்பாள்?

அவள் எனக்கு வேண்டும் என்றால், அவள் என்னை செருப்பால் அடித்துத் துரத்தியிருந்தாலும் கூட நான் வலிந்து சென்று அவளுடன் பேசி இருக்க வேண்டும். அவளை சமாதானப்படுத்தி இருக்க வேண்டும். பேசிப் பேசியே அவளை சிரிக்க வைத்திருக்க வேண்டும். என்னுடன் பேசாமல் இருக்க முடியாது என்னும் நிலைமைக்கு அவளை நான் கொண்டு வந்திருக்க வேண்டும். மாயங்கள் பல செய்து அவளை நான் எனது காதல் வலையிலும் சிக்க வைத்திருக்க வேண்டும்.

அதையெல்லாம் விட்டுவிட்டு, அவளைப் பற்றி எனக்குக் கணக்கே இல்லை என்கின்ற மாதிரியாக நடந்துகொண்டால் அவளும் என்னதான் செய்வாள்?

ஆனால், இப்பொழுது கூட ஒன்றும் கெட்டுப் போகவில்லை. நமது வாழ்க்கையில் நாம் எதிர்பார்க்கவே முடியாத சில விஷயங்கள் கூட நடக்கலாம். அவள் இப்பொழுது தான் விக்ரமுடன் பேச ஆரம்பித்திருக்கிறாள். அவள் அவனைக் காதலிக்க ஆரம்பிக்க முன்னர், ஏதாவது ஒரு வகையில் அவளை இம்ப்ரெஸ் செய்து என்னை உருகி உருகி காதலிக்க வைக்க வேண்டும்.

அவள் என்னை விட்டுப் போய் விட்டாளே என்று வாழ்நாள் முழுக்க வருந்துவதனை விட, ஏதாவது முயற்சி செய்து பாக்கலாமே எனத் தோன்றியது. உதவிக்கு கீர்த்தனா இருக்கின்றாள். தைரியமாக இறங்கலாம் என முடிவு செய்தேன்.

இவ்வளவு நேரமும், அவளுக்கு மாப்பிள்ளை பார்த்தது பற்றி எனக்குக் கவலையே இல்லை என்பது போல அவள் முன்னால் நடித்துக் கொண்டிருந்தேன். ஆனால், அதை வைத்தே ஒரு நாடகத்தினை அரங்கேற்றலாம் என முடிவு செய்தேன்.

யாமினி போன் பேசி முடித்ததும் மேலே செல்ல முன்னர் கீர்த்தனா எனக்கு போன் செய்தாள். ஆனால் நான் போனை எடுக்காமல் போதையில் மட்டையான மாதிரியாக கார் சீட்டில் படுத்துக் கொண்டேன்.

நான் போனை எடுக்காததால், யாமினியையும் அழைத்துக் கொண்டு நேராக காரின் அருகில் வந்தாள் கீர்த்தனா. நான் தூங்கிக் கொண்டிருக்கிறேன் என நினைத்து என்னை எழுப்ப முயற்சித்தாள். ஆனால், நான் கண்களையே திறக்காமல் முழுப் போதையில் இருப்பது போல நடந்து கொள்ள, மீண்டும் மீண்டும் எழுப்ப முயற்சித்தாள். நான் அசும்பவில்லை. பின்னர் யாமினியைப் பார்த்து,

“ஏய் நல்லா குடிச்சிருக்கான்டி. இப்ப என்ன பண்றது?” என்றாள்.

“கார்லயே தூங்கட்டும். லாக் பண்ணிட்டு நாம போகலாம்.” என்றாள் யாமினி.

“அம்மாக்கு தெரிஞ்சா அவ்ளோ தான். பேசாம தூக்கின்னு போகலாமா மேல?”
என்றவாறு என்னை காரில் இருந்து வெளியே தூக்கி எடுத்து கைத்தாங்கலாக கூட்டிச் செல்ல முயற்சித்தாள். அவளால் தனியாக என்னை தூக்கவோ நடக்க வைக்கவோ முடியாமல் போக யாமினியையும் உதவிக்கு அழைத்தாள்.

எனது இடது கையை கீர்த்தனாவின் தோளிலும் வலது கையை யாமினியின் தோளிலும் போட்டு இறுக்கமாகப் பிடித்துக்கொண்டனர். பின்னர் யாமினி இடது கையால் எனது இடது பக்க இடுப்பையும் கீர்த்தனா வலது கையால் எனது வலது பக்க இடுப்பையும் X ஷேப்பில் இறுக்கமாகப் பிடித்துக் கொண்டு மெல்ல நடக்க ஆரம்பித்தனர். நானும் போதையில் நடப்பது போல வாய்க்கு வந்ததையெல்லாம் உளறிக் கொண்டே மெல்ல மெல்ல நடந்து கொண்டிருந்தேன். எனது வேகத்திற்கே அவர்களும் நடந்து கொண்டிருந்தனர்.

இரண்டு பெண்களின் பஞ்சு மேனிகளும் எனது மேனியை அவ்வளவு நெருக்கமாக உரச எனது உடம்பெங்கும் இலத்திரன் பாய்ச்சல்கள் வெகு விமர்சையாக நடைபெற்றுக் கொண்டிருந்தன. நான் கீர்த்தனாவை விட்டு லேசாக விலகி யாமினியின் பக்கம் முழுவதுமாக சாய்ந்தபடி தலையினை முன்னால் தொங்கப் போட்டவாறு சென்று கொண்டிருந்தேன்.

யாமினியின் வாசனைகள் என்னை அவள் பற்றிய அத்தனை கவலைகளையும் மறக்கடித்துக் கிறங்கடிக்கச் செய்தன. துப்பட்டா அணிந்திருந்தாலும் கூட, அவள் நடக்கும் அதிர்வுகளில் மெல்ல மெல்லக் குலுங்கும் அவளது வட்ட வட்ட கொழு கொழு முலைகளை என்னால் மிக அருகிலேயே பார்க்க முடிந்தது. சில நேரங்களில் எனது வலது முழங்கையினால் அவளது இடது முலையின் ஸ்பரிசத்தினை உணரவும் முடிந்தது.

அவளது முலையின் ஸ்பரிசம் எனது ஆண்மையின் கோலினைத் தூண்டிவிட அது மெல்ல உசும்ப ஆரம்பித்தது.

தொடரும்….

By:- KaamaArasan
ungalnanban101010@gmail.com

666200cookie-checkயட்சி 8

Gravatar Image
Athena is a passionate writer who loves to explore the world of erotic storytelling. Since 2017, he has been collecting stories from around the internet and publishing them in one place for everyone to enjoy.