யட்சி 1

Posted on

“அண்ணா! இந்த போட்டோவ கொஞ்சம் பாரேன்.” என்றவாறு போனை நீட்டினாள் கீர்த்தனா.

“யாரு?” என்றபடி போனை வாங்கினேன்.

“நேத்து இவள பொண்ணு பாக்க வந்திருந்தப்ப எடுத்தது.”

“ஓஹ்”

இளஞ்சிவப்பு நிறப் புடவை. அதற்கு ஏற்றாற்போல சிகப்பு நிற ஜாக்கெட். அப்பொழுது தான் மலர ஆரம்பித்தது போன்ற லேசான செவ்விதழ் புன்னகையுடன் நின்று கொண்டிருந்தாள் யாமினி. அவளது கன்னங்கள் இரண்டிலும் நாணம் என்னும் இளஞ்சிகப்பு நிற ஒப்பனையினையும் அணிந்திருந்தாள்.

நான் வெளிநாடு செல்ல முன்னர் அவளை கடைசியாக நேரில் பார்த்த பொழுது இருந்ததனை விடவும் இப்பொழுது புடவையில் பல மடங்கு அழகாக தேவதை போல காட்சியளித்தாள்.

புருவங்கள் இரண்டுக்கும் இடையில் சின்னஞ்சிறிய ஒரு ஸ்டிக்கர் பொட்டு வைத்திருந்தாள். காதில் அழகான கம்மல். அந்தக் கம்மலும் பொட்டும் அவளது அழகினை மேலும் மேலும் மெருகூட்டிக் காண்பித்தன. நான் என்னையே அறியாமல் வைத்த கண் வாங்காமல் அவளது புகைப்படத்தினையே பெரிதாக்கி, சிறிதாக்கி பார்த்துக் கொண்டிருக்க, எனது கண்கள் லேசாக கலங்க ஆரம்பித்தன.

“எப்டி இருக்கா?” ஆர்வமாக கேட்டாள் கீர்த்தனா.

“ஹ்ம்ம். அவளுக்கென்ன? அழகா தான் இருக்கா” என்றபடி அவளிடம் போனை நீட்டினேன்.

“செம்ம அழகா இருக்கா ல?”

“ஹ்ம்ம்”

“நா தான் அவளுக்கு மேக்கப் பண்ணி விட்டேன். நல்லா இருக்கா?”

“ஹ்ம்ம். நல்லா தான் இருக்கு.”

“தேங்க்ஸ் ணா. உனக்கு அவள கல்யாணம் பண்ணி வைக்கலாம்ன்னு நினச்சேன். ஆனா அதுக்குள்ள அவ அப்பா அம்மாக்கு அவசரம். பாரேன். நீ வரதுக்குள்ள எல்லாமே முடிஞ்சி போச்சு.”

“எதுக்கு? அவ அழகுக்கும் அந்தஸ்துக்கும் ஏத்தமாதிரி அவங்க அப்பா அம்மா மாப்பிள்ள பாத்திருக்காங்க. நாம எங்க? அவங்க எங்க?”

“சும்மா ஒரு ஆசதான் ணா. அவ ரொம்ப நல்ல பொண்ணு. என்னோட பெஸ்ட் ப்ரெண்டு வேற. என்கூட ரொம்ப பாசமா இருப்பா. அதோட இந்த மாதிரி ஒரு அழகி எனக்கு அண்ணியா வந்தா நல்லா இருக்கும்ன்னு நெனச்சேன்.”

“சரி அத விடு. போய் ஒரு காப்பி போட்டு எடுத்துட்டு வா. ப்ரெண்ட்ஸ பாக்க போகணும். நா குளிச்சிட்டு வந்துடுறேன்.”

“ஹ்ம்ம். சரி”
என கீர்த்தனா எழுந்து ரூமை விட்டு சென்றதும் நீண்ட ஒரு பெரு மூச்சினை விட்டவாறு எழுந்தேன்.

போட்டிருந்த ஆடைகளை எல்லாம் களைந்து விட்டு டவலினை எடுத்துக்கொண்டு முழு நிர்வாணமாக பாத்ரூமினுள் நுழைந்தேன்.

“அவளுக்கென்ன
அழகிய முகம்
அவனுக்கென்ன
இளகிய மனம்
நிலவுக்கென்ன
இரவினில் வரும்
இரவுக்கென்ன
உறவுகள் தரும்
உறவுக்கென்ன
உயிர் உள்ள வரை
தொடர்ந்து வரும்”

கனத்த மனதினில் இருந்து அவளது நினைவாக வெளிவந்த பாடல் வரிகளை மெல்ல முணுமுணுத்துக்கொண்டு ஷவரினை திறந்து விட்டேன்.

கீர்த்தனாவுக்கு இப்பொழுது தோன்றிய இந்த ஆசை எனக்கு ஐந்து வருடங்களுக்கு முன்னர் யாமினியை முதன்முதலில் பார்த்த அந்த நொடியிலேயே தோன்றிவிட்டது. முன் வீட்டிலேயே தேவதை போன்ற ஒரு அழகிய பெண்ணைக் கண்டால் எந்த ஒரு ஆண்மகன் தான் அவளைக் காதலிக்காமல் இருப்பான்?

இன்ஜினியரிங் முடித்துவிட்டு வேலை தேடி அல்லாடிக்கொண்டிருந்த காலம் அது. சுகயீனம் காரணமாக எனது அப்பா திடீரென இறந்துவிட, அதன் பின்னர் முழுக் குடும்ப சுமையும் என் மீது விழுந்திருந்தது. ஒழுங்கான ஒரு வேலை இல்லாத காரணத்தால் குடும்ப கஷ்டத்துக்காக குறைந்த சம்பளத்தில் ஒரு ரெஸ்டாரெண்ட்டில் கேஷியராக வேலை பார்த்துக்கொண்டிருந்தேன்.

வரண்டு போய் இருந்த எனது வாழ்க்கைப் பாதையில் தேவதை போல திடீரென வந்திறங்கினாள் யாமினி. வெறுமையாகக் கிடந்த முன் வீட்டில் ஒரு குடும்பம் குடி வருவதும், அவர்களுக்கு தேவதை போன்ற ஒரு அழகான பெண் இருப்பதும், அவளை ஹீரோ முன் வீட்டில் இருந்தே ரசிப்பதனையும் காதலிப்பதனையும் சினிமாக்களில் தான் பார்த்திருக்கிறேன். ஆனால், அப்படி ஒரு சம்பவம் எனது வாழ்விலும் நடக்கும் என்று நான் கற்பனையிலும் கூட நினைத்துப் பார்த்தது கிடையாது.

அப்பொழுது அவளுக்கு வெறும் 20 வயது தான் ஆகி இருந்தது. ஆனாலும், ஒரே ஒரு பார்வையிலேயே அவளது அழகினால் என்னை சுண்டி இழுத்தாள். உயரமான தேகம், வசீகரமான முக அமைப்பு, பெரிய பெரிய கண்கள், அடர்த்தியான புருவங்கள், கூரிய நீண்ட மூக்கு, இளஞ்சிவப்பு நிற அழகிய இதழ்கள், நீளமான கூந்தல், அளவான அம்சமான வட்ட வடிவமான திரண்ட மார்பகங்கள், எடுப்பான பின்னழகு என ஆண்களை மயக்கும் சகல வசியங்களையும் அவள் தன்னகத்தே கொண்டிருந்தாள்.

அவளது அப்பாவும் அம்மாவும் டாக்டர்கள். பணத்திற்கு பஞ்சமில்லை. அந்த வீட்டினை சொந்தமாக வாங்கித்தான் குடி வந்திருந்தார்கள். அவளுக்கு ஒரு தம்பி. ஸ்கூல் படித்துக் கொண்டிருந்தான். அவளும் பக்கத்து ஊரில் இருக்கும் காலேஜில் படித்துக் கொண்டிருந்தாள். முன் வீடு என்பதனால் எனக்கு அவளை அடிக்கடி பார்க்க முடிந்தது. ஆனாலும், எதுவுமே பேசிக்கொள்வதில்லை. நேருக்கு நேர் சந்திக்கும் வேளைகளில் கூட லேசாக ஒரு புன்னகை. அவ்வளவு தான்.

அவளைப் பார்க்கும் போதெல்லாம் அவளது அழகும் அம்சங்களும் என்னை ஏதேதோ செய்யும். மனதில் ஆசைகள் பல தோன்றும். ஆனாலும், எங்களது குடும்ப பொருளாதார நிலைமையும் அவளது அந்தஸ்த்தும் என் கண் முன்னே வந்து மனதில் தோன்றும் ஆசைகளை அப்படியே கடிவாளமிட்டு இறுக்கக் கட்டிப் போடும்.

அப்பொழுதெல்லாம், அவளைப் போன்ற ஒரு அழகிய பணக்காரப் பெண்ணை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றால் நாமும் அதற்கு ஏற்ப நல்ல ஒரு தொழிலில் இருக்க வேண்டும், அந்தஸ்த்திலும் பெரியவனாக வேண்டும் என்று மனதில் தோன்றும்.

ஆனால், ஊரில் இருந்தால் வேலை கிடைப்பதே பெரிய கஷ்டம். வெளிநாடு சென்றால் தான் நன்றாக உழைக்க முடியும். பணம் வந்தால் அந்தஸ்த்தும் தானாகவே வந்து விடும். அப்படியே அவளையும் கல்யாணம் செய்து கொள்ள முடியும் என்று நண்பர்கள் ஆசை வார்த்தைகள் கூற, வெளிநாடு செல்ல வேண்டும் என்ற ஆசை எனக்குள்ளும் துளிர் விட ஆரம்பித்தது.

இதற்கிடையில், கொஞ்ச நாட்களில் யாமினியும் கீர்த்தனாவும் நண்பர்கள் ஆகிவிட்டிருந்தனர். அவளது அப்பாவும் அம்மாவும் டாக்டர்கள் என்பதனால் பெரும்பாலான நேரங்கள் அவர்கள் வீட்டில் இருப்பதில்லை. அதனால் அவளது வீட்டில் யாரும் இல்லாத பொழுதுகளில் தனிமையினைப் போக்குவதற்காக யாமினி எங்கள் வீட்டிற்கு வந்து கீர்த்தனாவுடனும் அம்மாவுடனும் பேசிக்கொண்டிருப்பாள். அல்லது கீர்த்தனாவை அவளது வீட்டிற்கு அழைத்துக் கொண்டு போய் பேசிக்கொண்டிருப்பாள். அல்லது இருவரும் ஏதாவது விளையாடிக் கொண்டிருப்பார்கள். அப்படி அவள் எங்கள் வீட்டிற்கு வரும் போதெல்லாம் அம்மாவுக்கும் கீர்த்தனாவுக்கும் சந்தேகம் வராத வண்ணமாக நான் அவளை சைட் அடித்துக் கொண்டிருப்பேன்.

இருந்தாலும், அவளுடன் பேச வேண்டும், நண்பர்கள் ஆக வேண்டும் என்ற ஆசை எனக்குள்ளே உருவாக ஆரம்பிக்க, கீர்த்தனா மூலமாக நானும் அவ்வப்போது யாமினியுடன் பேச ஆரம்பித்தேன். நாட்கள் செல்லச் செல்ல மெல்ல மெல்ல நானும் யாமினியும் நண்பர்களானோம். ஆனாலும், அவளை விட 4 வயது மூத்தவன் என்பதனால் கீர்த்தனாவைப் போல அவளும் என்னை ‘அண்ணா’ என்று தான் அழைப்பாள். அது எனக்கு ரொம்பவே தர்மசங்கடமாக இருந்தாலும் வேறு வழியின்றி மனதளவில் சமாதானமானேன்.

அவளைப் பார்த்த அந்த ஒரு நொடியிலேயே அவள் மேல் தோன்றிய அந்தக் காதலும் ஆசையும் அவளுடன் பேசும் பொழுது இன்னும் இரட்டிப்பானது. நண்பர்களான பின்னர் இன்னும் இன்னும் பல மடங்குகளால் அதிகரித்தது.

வெளிநாடு செல்லும் ஆசை மனதினுள் இருந்தாலும், வெளிநாடு சென்றால் யாமினியை விட்டுப் பிரிய நேரிடுமே என்றும் உள்ளுக்குள்ளே கவலையாக இருந்தது. காதல் ஒரு பக்கம், குடும்ப சூழ்நிலை ஒரு பக்கம் என்று என்ன செய்வதென்று தெரியாத ஒரு நிலையில் நான் இருந்தாலும் கூட, குடும்பத்துக்காகவும் எனது சிறந்த ஒரு எதிர்காலத்திற்காகவும் யோசித்து உறவினர்கள், நண்பர்கள் மூலமாக வெளிநாடு செல்லும் முயற்சியிலும் ஈடுபட ஆரம்பித்தேன்.

யாமினியின் மீதுள்ள காதல், அவளது வசீகரமான முகம், நலினங்கள் போன்றவற்றில் மயங்கி நாள் முழுவதும் அவளது நினைப்பிலேயே காலத்தினைப் போக்கிக் கொண்டிருந்தேன். ரெஸ்டாரெண்டில் வேலையில் இருக்கும் பொழுதுகளில் கூட வீட்டுக்கு எப்பொழுது செல்லலாம், அவளைப் பார்க்கலாம் என்று தான் மனம் அல்லாடிக் கொண்டிருக்கும். அவளைக் காணும் போதெல்லாம் ஒரு வினாடி நேரத்தினைக் கூட வீணடிக்காமல் அவளையே பார்த்துக் கொண்டிருப்பேன். அவள் ஏதேச்சையாக என்னைப் பார்த்தாலும் கூட அவளது அந்தக் காந்தப் பார்வையின் கிறக்கத்தில் அன்றைய தினம் முழுவதும் மனம் ஆகாயத்தில் பறந்து கொண்டிருக்கும். நண்பர்களை சந்திக்கும் பொழுதுகளில் கூட அவளது புகழயே தான் நான் அவர்களிடம் பாடிக்கொண்டிருப்பேன்.

ஒரு நாள், ஒரு விடுமுறை தினம். நண்பர்களை சந்தித்து யாமினியின் புகழ் பாடிக்கொண்டிருந்து விட்டு மதியம் வீட்டிற்கு வந்தேன். வீட்டிற்கு வந்ததும் எனது ஆசை நாயகி யாமினியை ஒரு முறை பார்க்க வேண்டும் போல இருந்தது. கீர்த்தனாவும் வீட்டில் இல்லை. அவள் யாமினியின் வீட்டில் இருப்பதாக அம்மா கூற, நானும் இது தான் சாக்கு என,

“ஒரு காபி போட்டு குடும்மா.” என்றேன்.

“இந்த மதிய நேரத்துல எதுக்கு காபி? கொஞ்சம் இரு. இன்னொரு பத்து நிமிஷத்துல சமைச்சி முடிச்சிருவேன்.”

“எனக்கு பசிக்கலமா. லேசா தல வலிக்கிற மாதிரி இருக்கு. சூடா ஒரு காபி குடிச்சா நல்லாருக்கும்”

“அப்போ அவள கூப்டு கேளு. இங்க சமையலுக்கு ஹெல்ப் பண்றத விட்டுட்டு அங்க போய் என்னதான் பண்றாளோ!”

“ஹ்ம்ம். சரிம்மா”
என்றவாறு நான் யாமினியின் வீட்டிற்குச் சென்றேன். வீட்டினுள் நுழைந்ததும் ஹால் முழுவதும் தட்டு முட்டு சாமான்கள் அங்குமிங்கும் பரந்து நிரம்பியபடி காணப்பட்டது. ஆனால், அவர்கள் இருவரும் ஹாலில் இல்லை.

“கீர்த்து”
சத்தமாக அழைத்தேன்.

“ஆஹ். என்னண்ணா?”
யாமினியின் ரூமில் இருந்து அவளது குரல் கேட்டது.

“என்ன பண்ற?”

“இங்க யாமினி ரூம் ல. என்னன்னு சொல்லு?”

“இதோ வாரேன்”
என்றவாறு நான் யாமினியின் ரூமினுள் நுழைந்தேன். அங்கு அவர்கள் இருவரும் அறை முழுவதையும் சுத்தம் செய்து முடித்து, அடுக்கி விட்டு மார்பிள் தளத்தினை மாப் செய்து கொண்டிருந்தார்கள்.

நான் யாமினியை நோக்கினேன். அவள் சாம்பல் நிற டீஷர்ட்டும் கருப்பு நிறத்தில் முழங்கால் வரை மறைக்கும் அளவுக்கு ஒரு இறுக்கமான லெக்கின்ஸ் ஷார்ட்ஸும் அணிந்து கொண்டு திரும்பி நின்றபடி வேலை செய்து கொண்டிருந்தாள். அவளது டீஷர்ட் முதுகுப்புறமாக வியர்வையில் ஆங்காங்கே நனைந்திருந்தது. டீஷர்ட் நனைந்திருந்ததனால் அவளது உடம்பில் ஆங்காங்கே ஒட்டிக்கொண்டு அவளது உடம்பின் அமைப்புக்களையும் ப்ரா அணிந்திருந்த தடத்தினையும் எனக்கு அழகாக வெளிச்சம் போட்டுக் காட்டியது. அத்தோடு அவளது அந்த லெக்கின்ஸ் ஷார்ட்ஸில் அடைபட்டு அழுத்தப்பட்டுக் கொண்டிருந்த அவளது பின்னழகு சதைகளின் மேலாக கால் வட்ட பரிதி வடிவில் அவள் போட்டிருந்த உள்ளாடையின் தடிமனான வெட்டு அச்சுக்களும் தெளிவாக வெளிப்பட்டுக் கொண்டிருந்தன.

நான் ரூமுக்குள் நுழைந்ததும் என்னைப் பார்க்காமலேயே நிமிர்ந்து டீஷர்டினை சரி செய்தாள். பின்னர் அவளது இறுக்கமான ஷார்ட்ஸ்ஸில் அடைபட்டு அழுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் அவளது பின்னழகினை மறைக்கும் வண்ணமாக டீஷர்ட்டினை கீழே இழுத்து விட்டபடி எனது பக்கம் திரும்பினாள்.

அவளது பொன்னிற முகத்திலும் கழுத்திலும் பல நூறு வியர்வைத் துளிகள் முத்து முத்தாக அமர்ந்திருந்தன. முதுகுப்புறம் போன்று அவளது இடுப்புப் பகுதியிலும் வயிற்றுப்பகுதியிலும் நெஞ்சுப் பகுதியிலும் கூட அவளது வியர்வைத் துளிகள் டீஷர்ட்டில் ஈரமாகப் படர்ந்து அவளின் உடம்புடன் ஒட்டிக்கொண்டிருக்க, ப்ராவுக்குள் அடைந்து கிடந்த அவளது திரண்ட இளம் பால்க்கனிகள் இரண்டினதும் மொத்த அளவுகளும் வளைவு நெளிவுகளும் லேசானா குலுங்கல்களும் தெள்ளத் தெளிவாக எனது கண்களுக்கு விருந்தாகின.

அதுவரை காலமும் கூடுதலாக பகல் நேரங்களில் சுடிதாருடனும் இரவு நேரங்களில் நைட்டியுடனும் தான் நான் அவளைப் பார்த்திருக்கிறேன். ஓரிரு தடவைகள் மாத்திரம் டீஷர்ட்டும் நீண்ட காற்சட்டையும் அணிந்து பார்த்திருக்கிறேன். அதிலும் இறுக்கமான ஆடைகள் ஏதும் அணிந்திருந்தால் அதன் மேல் ஷாவ்ல் போட்டிருப்பாள். அவளது உடம்பின் அங்க அளவுகள் தெளிவாகத் தெரியும் படியாக எந்த ஆடையும் அணிய மாட்டாள். எப்பொழுதும் அவளது ஆடை முறைகளில் ஒரு கண்ணியமும் நேர்த்தியும் இருந்து கொண்டிருக்கும். ஆனால் அன்று, எதிர்பாராத விதமாக அவளை அப்படி ஒரு நிலையில் நான் பார்த்திருந்தேன்.

அதுவரை, அவளது அக முக அழகில் காதல் வயப்பட்டிருந்த என்னை முதல் முதலில் அவளது கவர்ச்சியான தேகத்தின் மூலம் காமவயப்படுத்தினாள்.

“ஹ்ம்ம். பரவாயில்லை. எல்லா விதத்திலும் அழகாகவும் அம்சமாகவும் தான் இருக்கின்றாள். நீ குடுத்து வச்சவன் தான்.” என்று என்னை நானே பாராட்டிக்கொண்டேன்.

“என்னண்ணா? எதுக்கு கூப்ட?”
திடீரென கீர்த்தனாவின் குரல் கேட்டு காமலோகத்திலிருந்து நிஜ உலகத்திற்கு வந்தேன். யாமினியின் தேகத்தில் இருந்து பார்வையினைப் பிடுங்கி எடுத்து கீர்த்தனாவின் பக்கம் செலுத்தினேன்.

“ஒரு காபி போட்டுக் குடேன்.”

“இந்த மதிய நேரத்துல உனக்கு காபி கேக்குதா? லூஸு அண்ணா.”

“தல வலிக்குதுடி. அதனால தான்.”

“ஒரு 15 மினிட்ஸ் வெயிட் பண்ணு. யாமினி பாவம். தனியா கஷ்டப்பட்டுன்னு இருக்கா. வேல முடிஞ்சதும் வந்து போட்டு தாரேன்.”

இதனைப் பார்த்துக்கொண்டிருந்த யாமினி,
“ஹேய் கீர்த்து. நீ போ. இதெல்லாம் நா பாத்துக்குறேன்.”
என்றவள் பின்னர் என்னைப் பார்த்து,

“நா வேணாம்னு தான் ணா சொன்னேன். அவ தான் கேக்க மாட்றா.”

“ப்ரெண்ட்ஸ்னா அப்டிதானே. ஒரு ப்ரெண்ட் தனியா கஷ்டப்படுறத இன்னொரு ப்ரெண்டால பாத்துன்னு சும்மா இருக்க முடியுமா என்ன?” என்றேன் பெருமையாக.

“அப்போ நீயும் வந்து ஹெல்ப் பண்ணு.” என்றாள் கீர்த்தனா.

“என்ன?”

“நீயும் யாமினி ப்ரெண்ட் தானே. அப்போ நீயும் வந்து ஹெல்ப் பண்ணு.”

நான் யாமினியைப் பார்த்தேன். அவள் எதுவும் சொல்லாமல் வேலை செய்து கொண்டிருந்தாள்.

“அதுக்கென்ன! என்ன பண்ணனும்ன்னு சொல்லு. பண்றேன்.”

“ஐயோ. அதெல்லாம் ஒண்ணும் வேணாம்ணா. நீங்களே தலவலி ல இருக்கீங்க. நீங்க போய் படுத்து ரெஸ்ட் எடுங்க.”
என்றவள் கீர்த்தனாவைப் பார்த்து,

“நீ போ. நா பாத்துக்குறேன்.”
என்றாள்.

“இப்ப எனக்கு தல வலி பெருசா இல்ல யாமினி. ஓகே தான். கீர்த்து இங்கயே இருக்கட்டும். ஏதாச்சும் ஹெல்ப் தேவன்னா சொல்லு. நானும் பண்ணித் தரேன்.” என்றேன் ஆர்வத்துடன்.

“அதெல்லாம் ஒண்ணும் இல்லன்னா. நாங்களே பத்துக்குறோம்.” என்றவளிடம்,

“அந்த பாக்ஸ தூக்கி பரண் மேல வைக்கணும்னு சொன்னியே. அத அண்ணாகிட்ட சொன்னா தூக்கி வைப்பான் ல.” என்றாள் கீர்த்தனா.

யாமினி தயங்கினாள்.

“பரவால்ல யாமினி. சொல்லு. எங்க வைக்கணும்?” என்றேன்.

“இல்லன்னா. வேணாம். நா அப்பா வந்ததும் சொல்லி எடுத்து வைக்கிறேன். பரவால்ல.”
என்றவளை கோபமாகப் பார்த்தாள் கீர்த்தனா.

“அப்பா வர வரைக்கும் அது அங்கேயே இருந்தா நீ என்னன்னு ஹால் கிளீன் பண்ணுவ? இவன உன்னோட அண்ணா மாதிரி நெனச்சிக்கோ. கூச்சப்படாம சொல்லு. அவன் பண்ணித்தருவான்.”

கீர்த்தனா அண்ணா மாதிரி என்றதும் அவள் மேல் கோபம் கோபமாக வந்தது. இருந்தாலும் என்ன செய்வது என்று எதுவும் சொல்லாமல் நான் யாமினியைப் பார்த்தேன்.

“சரி ஓகே. வாங்கண்ணா.”
என்றபடி எனக்கு முன்னால் நடந்தாள். நானும் அவளது பின்னழகு ஆட்டங்களை ரசித்தபடி பின்னாலேயே நடந்தேன்.

தொடரும்…..

By-
ungalnanban101010@gmail.com

The post யட்சி 1 appeared first on Tamil Sex Stories.

Gravatar Image
Athena is a passionate writer who loves to explore the world of erotic storytelling. Since 2017, he has been collecting stories from around the internet and publishing them in one place for everyone to enjoy.